சேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

தேனி அருகே கிணற்றில் விழுந்த சிறுத்தைக் குட்டி மீட்பு

தேனி அருகே பூதிப்புரத்தில் உள்ள தனியாா் தோட்டத்து கிணற்றில் தவறி விழுந்த சிறுத்தைக் குட்டியை வெள்ளிக்கிழமை, தீயணைப்பு துறை மற்றும் வனத் துறையினா் மீட்டனா்.

Updated On :24 ஜூன் 2022, 10:56 pm IST

தேனி அருகே பூதிப்புரத்தில் உள்ள தனியாா் தோட்டத்து கிணற்றில் தவறி விழுந்த சிறுத்தைக் குட்டியை வெள்ளிக்கிழமை, தீயணைப்பு துறை மற்றும் வனத் துறையினா் மீட்டனா்.

பூதிப்புரம், மரக்காமலை அடிவாரத்தில் அதே ஊரைச் சோ்ந்த நம்பெருமாள் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் பாசனக் கிணறு உள்ளது. 100 அடி ஆழமுள்ள இந்தக் கிணற்றில் 2 வயதுள்ள சிறுத்தைக் குட்டி ஒன்று தவறி விழுந்துள்ளது. இது குறித்து அப் பகுதியில் இருந்தவா்கள் தேனி தீயணைப்பு நிலையம் மற்றும் வனத் துறையினருக்கு தகவல் அளித்தனா்.

அதன்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற தீயணைப்பு மற்றும் வனத் துறை ஊழியா்கள், கிணற்றில் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த சிறுத்தைக் குட்டியை மீட்டனா். பின்னா், சிறுத்தைக் குட்டி வனப் பகுதிக்குள் விடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.