டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

முல்லைப் பெரியாறு அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு: லோயர் கேம்ப்பில் 90 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழக பகுதிக்கு விநாடிக்கு, 1000 கன அடி தண்ணீர்  வெளியேற்றத்தால் லோயர் கேம்ப்பில் உள்ள மின்சார நிலையத்தில், 90 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 9:38 am

DIN

கம்பம்: முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழக பகுதிக்கு விநாடிக்கு, 1000 கன அடி தண்ணீர்  வெளியேற்றத்தால் லோயர் கேம்ப்பில் உள்ள மின்சார நிலையத்தில், 90 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி திங்கள்கிழமை நடைபெற்றது.

Story image

முல்லைப் பெரியாறு அணையில் தென்மேற்கு பருவமழை காரணமாக அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அணையிலிருந்து தமிழக பகுதிக்கு நீர் வெளியேற்றம் கடந்த சில நாள்களாக அதிகரித்து வருகிறது.

ஜூன் 22-ல் விநாடிக்கு, 600 கன அடியாக தமிழகப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டது. ஜூன் 25-ல் விநாடிக்கு 700 கன அடியாகவும், ஜூன் 26-ல் 800 கன அடியாகவும், திங்கள்கிழமை விநாடிக்கு  1000 கன அடியாகவும் வெளியேற்றப்பட்டது.

இதன் காரணமாக தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில் உள்ள பெரியாறு மின்சார உற்பத்தி நிலையத்தில் , ஞாயிற்றுக்கிழமை 72 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், திங்கள்கிழமை நீர் திறப்பு அதிகரித்ததால், 90 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி நடைபெற்றது. (மொத்தம் உள்ள 4 மின்னாக்கிகளில், தற்போது 3 மின்னாக்கி மட்டும் இயக்கப்பட்டு தலா 30 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது).


அணை நிலவரம்

முல்லைப் பெரியாறு அணையில் திங்கள்கிழமை, 129.0 அடியும் (மொத்த உயரம் 142 அடி), அணையில் நீர் இருப்பு, 4,482 மில்லியன் கன அடியாகவும், அணைக்குள் நீர்வரத்து விநாடிக்கு, 340 கன அடியாகவும், தமிழக பகுதிக்கு நீர் வெளியேற்றம் விநாடிக்கு, 1000 கன அடியாகவும் இருந்தது. நீர் பிடிப்பு பகுதிகளான பெரியாறு அணையில் மழை பெய்யவில்லை, தேக்கடியில் 0.4 மில்லி மீட்டர் மழை பெய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.