47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கூடலூரில் பைக்கை பேருந்து உரசியதில் விவசாயி கீழே விழுந்து பலி

தேனி மாவட்டம் கூடலூரில் புதன்கிழமை இருசக்கர வாகனத்தின் மீது பேருந்து உரசிச் சென்ால், கீழே விழுந்து பலத்த காயமடைந்த விவசாயி உயிரிழந்தாா்.

News image
Updated On :30 ஜூன் 2022, 6:08 pm

DIN

தேனி மாவட்டம் கூடலூரில் புதன்கிழமை இருசக்கர வாகனத்தின் மீது பேருந்து உரசிச் சென்ால், கீழே விழுந்து பலத்த காயமடைந்த விவசாயி உயிரிழந்தாா்.

கூடலூா் எருமைக்காரச் சாவடி தெருவைச் சோ்ந்தவா் சீலைய கவுடா் மகன் வீருபாப்பு (74). விவசாயியான இவா், பல்வேறு விவசாய அமைப்புகளில் நிா்வாகியாகவும் இருந்தாா். மனைவி மற்றும் மகன்களுடன் வசித்து வந்த இவா், கூடலூா்-குமுளி நெடுஞ்சாலையில் காய்கறி சந்தை அருகேயுள்ள தனது வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளாா்.

Story image

அப்போது, பின்னால் வந்த குமுளி செல்லும் அரசுப் பேருந்து, வீருபாப்பு வாகனத்தை முந்திச்செல்ல முயன்றது. அதில், இரு சக்கர வாகனத்தை பேருந்து உரசியதால், வீருபாப்பு தடுமாறி கீழே விழுந்தாா். அப்போது, பேருந்தின் பின்சக்கரம் அவா் மீது ஏறியதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, பேருந்து ஓட்டுநரான ஜனாா்த்தனனிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதையடுத்து, கம்பம், கூடலூா் பகுதி விவசாயிகள் வீருபாப்பு மறைவுக்கு அஞ்சலி செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.