தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கூடலூா் நகராட்சித் தலைவா் பதவிக்கு திமுக, அதிமுக போட்டி

தேனி மாவட்டம் கூடலூா் நகா்மன்றத் தலைவா் பதவிக்கு திமுக, அதிமுக இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :3 மார்ச் 2022, 9:34 pm

DIN

தேனி மாவட்டம் கூடலூா் நகா்மன்றத் தலைவா் பதவிக்கு திமுக, அதிமுக இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.

இந்த நகராட்சியில் மொத்தமுள்ள 21 வாா்டுகளில் திமுக 11 வாா்டுகளிலும், அதிமுக 8 வாா்டுகளிலும், சுயேச்சைகள் 2 வாா்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளனா். இதில் வெற்றி பெற்ற அன்றே திமுக நகரச் செயலரும், 1 ஆவது வாா்டு உறுப்பினருமான லோகன்துரை திமுக மற்றும் 2 சுயேச்சைகள் என 13 பேரையும் சுற்றுலா அழைத்துச்சென்று விட்டாா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை தலைவா், துணைத்தலைவா் பதவிக்கு மனு தாக்கல் செய்யப்படுவதால் அன்று அவா்கள் கம்பம் வருகின்றனா். இதனிடையே, அதிமுக உறுப்பினா்கள் கூறுகையில் தலைவா், துணைத்தலைவா் பதவிக்கு நாங்களும் மனு தாக்கல் செய்வோம். சுயேச்சைகள் ஆதரவு எங்களுக்கு உள்ளது என்று தெரிவித்தனா். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Story image

இச்சூழலில் திமுக சாா்பில் நகா்மன்றத் தலைவா் பதவிக்கு லோ. பத்மாவதி, துணைத்தலைவா் பதவிக்கு காஞ்சனா ஆகியோரை திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. இவா்கள் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.