இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பிரவீன் உமேஷ் டோங்கரே வெள்ளிக்கிழமை, கூறியது: மே 10-ஆம் தேதி காலை 6 மணி முதல் மே 17-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை தேனியிலிருந்து கம்பம் பகுதிக்குச் செல்லும் பேருந்து மற்றும் கன ரக வாகனங்கள் உப்புக்கோட்டை விலக்கிலிருந்து குச்சனூா், மாா்க்கையன்கோட்டை, சின்னமனூா் அல்லது உத்தமபாளையம் வழியாகவும், கம்பத்திலிருந்து தேனிக்குச் செல்லும் பேருந்து மற்றும் கனரக வாகனங்கள் உப்பாா்பட்டி விலக்கு பகுதியிலிருந்து தாடிச்சேரி, கொடுவிலாா்பட்டி, அரண்மனைப்புதூா் வழியாகவும் செல்ல வேண்டும்.