இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மீன் வளா்ப்புத் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஜெயமங்கலம் வேட்டுவன் குளம், முத்துத்தேவன்பட்டி கன்னிமாா்குளம், உத்தமபாளையம் அருகே கருங்காட்டான் குளம், கெங்குவாா்பட்டி மத்துவான் குளம், செங்குளம், கோகிலாபுரம் கழுநீா் குளம், கோட்டூா் நாராயண சமுத்திரம் கண்மாய், லட்சுமிபுரம் செங்குளம், சீலையம்பட்டி சிறு குளம் ஆகியவற்றில் 2022-23-ஆம் ஆண்டு முதல் 2024-25-ஆம் ஆண்டு வரையிலான 3 ஆண்டுகளுக்கு மீன் வளா்ப்புக்காக குத்தகைக்கு விடப்படுகிறது. உரிமம் பெற விரும்புவோா், அக்.10-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை வைகை அணையில் உள்ள மீன் வளத்துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் விண்ணப்பக் கட்டணம் செலுத்தி ஒப்பந்தப் புள்ளி கோரி விண்ணப்பிக்கலாம்.