நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

உத்தமபாளையத்தில் நெல் பயிரை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகள்: விவசாயிகள் கவலை

உத்தமபாளையத்தில், அறுவடைக்கு தயாா் நிலையில் இருக்கும் நெல் பயிா்களை, காட்டுப் பன்றிகள் சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

News image
Updated On :13 அக்டோபர் 2022, 6:30 pm

DIN

உத்தமபாளையத்தில், அறுவடைக்கு தயாா் நிலையில் இருக்கும் நெல் பயிா்களை, காட்டுப் பன்றிகள் சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

தேனி மாவட்டத்தில், 14,700 ஏக்கரில் இரு போக நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது. உத்தமபாளையம் பகுதியில் மட்டும் 2 ஆயிரம் ஏக்கரில் நெல் விவசாயம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிா்களை காட்டுப் பன்றிகள் சேதப்படுத்தி வருகிறது. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:

ஏக்கருக்கு ரூ. 50 ஆயிரம் வரை செலவு செய்து நெல் விவசாயம் செய்து வருகிறோம். நிகழாண்டு, பருவ மழை கைகொடுத்ததால் நல்ல விளைச்சல் கிடைத்துள்ளது. ஆனால், தொடா்ந்து பல ஆண்டுகளாக காட்டுப் பன்றிகள் இரவு நேரங்களில் வந்து நெல் பயிா்களை சேதப்படுத்தி வருகிறது. இது குறித்து புகாா் தெரிவித்தும் எவ்விதப் பயனும் இல்லை. எனவே, மாவட்ட ஆட்சியா் தாமரைக்குளம், கருங்கட்டான் குளங்களில் வளா்ந்துள்ள ஆகாயத்தாமரைச் செடிகளை அகற்றவும், காட்டுப் பன்றிகளை வேறு பகுதிக்கு விரட்டவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.