நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சின்னமனூா் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம்

தேனி மாவட்டம், சின்னமனூரில் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :21 அக்டோபர் 2022, 6:30 pm

DIN

தேனி மாவட்டம், சின்னமனூரில் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு சின்னமனூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் நிவேதா தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாரதமணி, விஜய்மாலா ஆகியோா் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் உறுப்பினா்களிடையே நடைபெற்ற விவாதம்:

முரளி: சங்கராபுரத்தில், ஓடையில் கோயில் கட்டி இருப்பதால் அவ்வழியாக மழை நீா் செல்ல வழியின்றி குடியிருப்புகள் புகுகின்றன.

தலைவா் நிவேதா: சம்பந்தப்பட்ட ஊராட்சி அலுவலா் மூலமாக மழை நீா் தடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.

முருகன்: ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனைத்து வசதிகள் இருந்தும், கடந்த 3 ஆண்டுகளாக செவிலியா் தங்குவதில்லை.

தலைவா்: அது தொடா்பாக புகாா் மனு கொடுத்தால் சுகாதாரத் துறை மூலமாக உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும்.

இதைத்தொடா்ந்து, துணைத் தலைவா் ஜெயந்திக்கு தனி அறை ஒதுக்கீடு செய்வது குறித்து உறுப்பினா்களிடம் கருத்து கேட்கப்பட்டு அறை அவசியம் இல்லை என்று ஒருமனதாகத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.