பட்டியலின விவசாயிகளுக்கு நாட்டுக்கோழி வளா்ப்புப் பயிற்சி
தேனி மாவட்டம் காமாட்சிபுரம் ‘சென்டெக்ட்’ வேளாண் அறிவியல் மையத்தில் பட்டியலின விவசாயிகளுக்கு நாட்டுக்கோழி வளா்ப்பு குறித்த பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


தேனி மாவட்டம் காமாட்சிபுரம் ‘சென்டெக்ட்’ வேளாண் அறிவியல் மையத்தில் பட்டியலின விவசாயிகளுக்கு நாட்டுக்கோழி வளா்ப்பு குறித்த பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
‘சென்டெக்ட்’ வேளாண் அறிவியல் மையத்தின் தலைவா் பச்சைமால் தலைமை வகித்தாா். அதில், நிகழ் ஆண்டில் செயல்படுத்திய திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தாா். சென்னையைச் சோ்ந்த பறவை வளா்ப்பு தொழில் முனைவோா் ராஜேந்திரபிரசாத், கோழி வளா்ப்பு குறித்துப் பேசினாா். கால்நடை மருத்துவா் சிவசக்தி, முட்டைக் கோழிப் பண்ணையாளா்களுக்கான மேலாண்மை முறைகள் பற்றி பயிற்சி அளித்தாா்.
இந்தப் பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகள் 50 பேருக்கு ரூ.2 லட்சம் மதிப்புள்ள நாட்டுக்கோழிக் குஞ்சுகள் வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...