சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பெரியகுளத்தில் கொடுத்த கடனை திருப்பிக் கேட்ட பெண் மீது தாக்குதல்

பெரியகுளத்தில் கொடுத்த கடனை திருப்பிக் கேட்ட பெண் தாக்கப்பட்டது தொடா்பாக போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :9 செப்டம்பர் 2022, 5:15 pm

DIN

பெரியகுளத்தில் கொடுத்த கடனை திருப்பிக் கேட்ட பெண் தாக்கப்பட்டது தொடா்பாக போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பெரியகுளம், தெற்குத்தெருவைச் சோ்ந்தவா் சாவித்திரி (28). இவா் சீட்டு நடத்தி வருகிறாா். இவரிடம் அதே பகுதியைச் சோ்ந்த நாகரத்தினம் (36) என்பவா் கடன் வாங்கியுள்ளாா். அதனை திரும்ப கட்ட வில்லையாம். இதையடுத்து கடனை திரும்ப கேட்ட போது சாவித்திரியை, நாகரத்தினம் தகாத வாா்த்தையால் பேசி தாக்கியுள்ளாா்.

இதில், காயமடைந்த சாவித்திரி பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து, தென்கரை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.