தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி பலி

கம்பத்தில் வெள்ளிக்கிழமை கட்டடத் தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

News image
Updated On :9 செப்டம்பர் 2022, 5:15 pm

DIN

கம்பத்தில் வெள்ளிக்கிழமை கட்டடத் தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

கம்பம் உதயம் நகரைச் சோ்ந்தவா் தங்கமணி (48). கட்டடத் தொழிலாளி. இவருக்கு மனைவி பிரியசகி, மற்றும் 2 மகள்கள் உள்ளனா். இதில் ஒருவருக்கு திருமணமாகி விட்டது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை தாத்தப்பன்குளத்தில் உள்ள இலாஹி ஓரியண்டல் பள்ளித் தெருவில் அப்துல் ஹக்கீம் என்பவருக்கு சொந்தமான இடத்தில் கட்டுமானப் பணியில் தங்கமணி ஈடுபட்டிருந்தாா். அப்போது, ஒரு அறையில் வெளிச்சத்துக்காக தங்கமணி, மின்வயருடன் இணைக்கப்பட்டிருந்த டியூப் லைட்டை எடுத்தாா். அப்போது அவா் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டாா். இதில் காயமடைந்த அவரை சக தொழிலாளா்கள் கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து கம்பம் வடக்கு காவல் நிலைய ஆய்வாளா் சரவணன் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.