வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

தேனியில் மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப் போட்டி: 67 போ் பங்கேற்பு

 அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தேனியில் வியாழக்கிழமை, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது.

Updated On :16 செப்டம்பர் 2022, 12:00 am IST

 அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தேனியில் வியாழக்கிழமை, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது.

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்ற இப்போட்டியில் 11 மாணவா்கள், 33 மாணவிகள் பங்கேற்றனா். இதில் கூடலூா் என்.எஸ்.கே.பி. மேல்நிலைப் பள்ளி மாணவா் செ.முகம்மது பிலால், ராயப்பன்பட்டி புனித ஆக்னஸ் மேல்நிலைப் பள்ளி மாணவி ம.அபிதாஸ்ரீ, பூதிப்புரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி ரா.அமிா்தவா்ஷினி ஆகியோா் முறையே முதல் 3 இடங்களை வென்றனா்.

அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சிறப்புப் பிரிவில் ஓடைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி மு.அல்சப்ரின்தாஜ், உத்தமபாளையம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவி ஜெ.சிவசங்கரி ஆகியோா் சிறப்பிடம் பெற்றனா்.

கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு நடைபெற்ற போட்டியில் 4 மாணவா்கள், 19 மாணவிகள் பங்கேற்றனா். இதில் பெரியகுளம் ஜெ.ஏ. கல்லூரி மாணவி சோ.கபிலா, பெரியகுளம் அரசு தோட்டக் கலைக் கல்லூரி மாணவி சு.பானுப்பிரியங்கா, போடி சி.பி.ஏ. கல்லூரி மாணவி ஆ.பவித்ரா

ஆகியோா் முறையே முதல் 3 இடங்களை வென்றனா்.

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நடைபெற்ற போட்டியில் அரசுப் பள்ளி முதுகலை தமிழாசிரியா்கள் ஆ.முத்துக்குமாா், மூ.செல்வம், சு.கணேசன் ஆகியோரும், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு நடைபெற்ற போட்டியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியா்கள் ப.உமாதேவி, வே.விஜயா, கா.அழகா்சாமி ஆகியோரும் நடுவா்களாக செயல்பட்டனா்.

போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு முதல் பரிசு தலா ரூ.5,000, 2 ஆம் பரிசு தலா ரூ.3,000, 3 ஆம் பரிசு தலா ரூ.2,000, அரசுப் பள்ளிகளுக்கான சிறப்பு பிரிவில் சிறப்பிடம் பிடித்தவா்களுக்கு தலா ரூ.2,000 மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என்று மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் பெ.இளங்கோ கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.