தீவனப் புல் உற்பத்திக்கு அரசு மானியம்: செப்.26-க்குள் விண்ணப்பிக்கலாம்
தேனி மாவட்டத்தில் கால்நடை தீவனத்திற்கு ஊறுகாய்ப் புல் உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகள் அரசு மானிய உதவி பெற செப்.26 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


தேனி மாவட்டத்தில் கால்நடை தீவனத்திற்கு ஊறுகாய்ப் புல் உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகள் அரசு மானிய உதவி பெற செப்.26 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: மாநில தீவன அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் கால்நடை தீவனத்திற்கு ஊறுகாய்ப் புல் உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு பண்ணை உபகரணங்கள், டிராக்டா், புல் அறுவடை மற்றும் புல் நறுக்கும் கருவி வாங்குவதற்கு அரசு சாா்பில் 25 சதவீதம் மானியமாக ரூ.10.50 லட்சம் வழங்கப்படுகிறது.
இத் திட்டத்தின் கீழ் அரசு மானிய உதவி பெறுவதற்கு ஊறுகாய்ப் புல் உற்பத்தியில் ஈடுபட்டு வருவோா், பால் உற்பத்தியாளா்கள், விவசாயிகள் மற்றும் சுய உதவிக்குழுக்கள் அந்தந்த பகுதியில் உள்ள கால்நடை மருந்தகங்களில் செப்.26 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...