கம்பம்: தேனி மாவட்டம் கம்பத்தில் மைதீன் ஆண்டவர் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சனிக்கிழமை நடைபெற்றது.
தேனி மாவட்டம் கம்பத்தில் மைதீன் ஆண்டவர் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் விழிப்புணர்வு நிகழ்வாக தூய்மை பணி சனிக்கிழமை நடைபெற்றது.
இதையும் படிக்க: சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால்: உயர் நீதிமன்றம் எச்சரிக்கை
மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் குப்பை அகற்றும் பணியை நகர்மன்றத் தலைவர் வனிதா நெப்போலியன் தொடக்கி வைத்தார்.
தூய்மை விழிப்புணர்வு இயக்க நிகழ்வில் வார்டு உறுப்பினர்கள் அ.சாதிக், சுபத்ரா சொக்கராஜா, சுந்தரி வீரபாண்டியன், அன்புகுமாரி ஜெகன், பரிதி இளம்வழுதி, பார்த்திபன், ஷாகிதா, அபிராமி மற்றும் சுகாதார அலுவலர் சுந்தரராஜன், ஆய்வாளர்கள் சுருளியப்பன், லெனின் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள், 11-வது வார்டு பொதுமக்கள் கலந்து கொண்டனர்.