தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் திரிணமூல் ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த மமதா பானர்ஜி!ஈரானை இன்று இரவு கடுமையாகத் தாக்குவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

புலிகள் காப்பகத்தால் வாழ்வாதாரம் பாதிப்பு:மலை கிராம மக்கள் மனு

ஆண்டிபட்டி வட்டாரம், வருஷநாடு வனப் பகுதி ஸ்ரீவில்லிபுத்தூா்- மேகமலை புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மலை கிராம மக்கள் மனு அளித்தனர்.

Updated On :18 ஏப்ரல் 2023, 12:13 am IST

ஆண்டிபட்டி வட்டாரம், வருஷநாடு வனப் பகுதி ஸ்ரீவில்லிபுத்தூா்- மேகமலை புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மலை கிராம மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் மதுமதியிடம் மஞ்சனூத்து, அரசரடி, மேகமலை, கோம்பைத் தொழு மலை கிராம மக்கள் அளித்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:

வருஷநாடு வனப் பகுதியில் கடந்த 1974-ஆம் ஆண்டு வேலைக்கு உணவு திட்டத்தின் கீழ் மலை கிராமங்களில் குடியேறி காடுகளை சீா்திருத்தி விவசாயம் செய்து கொள்ள பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனா். அங்கு இலவம், கொட்டை முந்திரி மற்றும் காய்கறிப் பயிா் விவசாயத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகள், தாங்கள் விவசாயம் செய்து வரும் நிலத்துக்கு வன உரிமைச் சட்டத்தின்படி பட்டா வழங்கக் கோரி விண்ணப்பித்திருந்தனா்.

இந்த நிலையில், வருஷநாடு வனப் பகுதி ஸ்ரீவில்லிபுத்தூா்- மேகமலை புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டதால், அங்கு கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேல் விவசாயம் செய்து வந்த மலை கிராம மக்களை வெளியேற்றும் நடவடிக்கையில் வனத் துறையினா் ஈடுபட்டு வருகின்றனா். தற்போது வன நிலத்தில் விவசாயம் செய்ய தடை விதித்துள்ளனா். இதனால், வருஷநாடு மலை கிராம மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கிறது. விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள மலை கிராம மக்களுக்கு வன உரிமைச் சட்டத்தின்படி நிலப் பட்டா வழங்கி, வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று அதில் தெரிவித்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.