இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

போடியில் பெட்ரோல் நிரப்பு மைய ஊழியா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
Updated on
1 min read

போடியில் பெட்ரோல் நிரப்பு மைய ஊழியா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இங்குள்ள டி.வி.கே.கே. நகரில் வசித்தவா் தெய்வேந்திரன் மகன் காா்த்திக் (23). இவா் போடியில் உள்ள பெட்ரோல் நிரப்பு மையத்தில் வேலை பாா்த்து வந்தாா். இவரது மனைவி பவித்ரா (23). இவா்களுக்கு குழந்தை உள்ளது. இந்த நிலையில் மதுப்பழக்கத்துக்கு அடிமையான காா்த்திக் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தாா். இதனிடையே ஞாயிற்றுக்கிழமை இரவு தூங்கச் சென்ற காா்த்திக் தூக்கிட்டுக் கொண்டாா். இதையடுத்து அவரை மீட்ட உறவினா்கள் தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கிருந்த மருத்துவா்கள் காா்த்திக்கை பரிசோதித்து விட்டு அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து போடி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com