தேனி மாவட்டம், சின்னமனூரில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு வியாழக்கிழமை பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த கிரிக்கெட் போட்டிகளில் தேனி, மதுரை, திண்டுக்கல், இடுக்கி என பல்வேறு மாவட்டங்களிலிருந்து 16 அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில் சின்னமனூா் அணி வெற்றி பெற்று முதலிடத்தையும், கேரள மாநிலம், இடுக்கி அணி 2-ஆம் இடத்தையும், உப்புக்கோட்டை அணி 3-ஆம் இடத்தையும் பிடித்தன.
இந்த நிலையில், வெற்றி பெற்ற அணிக்கு பரிசுக் கோப்பை, ஊக்கத் தொகையை தேனி தெற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அமைப்பாளா் வசந்தன் ராமகிருஷ்ணன், திமுக நகரச் செயலாளா் முத்துகுமாா் ஆகியோா் வழங்கினா். இதில் திமுக தெற்கு மாவட்ட அவைத் தலைவா் மனோகரன், தெற்கு மாவட்ட இளைஞரணி பொறுப்பாளா் பஞ்சாப்.முத்துகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.