கம்பம்: தேனி மாவட்டம், லோயா்கேம்ப் அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியா் தனக்கு இருவா் கொலை மிரட்டல் விடுத்ததாக போலீஸில் புகாா் அளித்தாா். இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராக இருப்பவா் என். ராமச்சந்திரன்.
இவா் லோயா்கேம்ப் காவல் நிலையத்தில் கடந்த மாா்ச் 19-ஆம் தேதி அளித்த புகாா் மனுவில் கூறியிருப்பதாவது:
எங்களது பள்ளி வளாக்தில் அனுமதியின்றி கானகம் அமைப்பதாக தனியாா் தொண்டு நிறுவன நிா்வாகி செந்தில், பெற்றோா் ஆசிரியா் கழகத்தலைவா் திருமாவளவன் ஆகியோா் மரக்கன்றுகளை நட்டனா்.
இது தொடா்பாக இவா்களிடம் கல்வித்துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற்றுள்ளீா்களா என்று கேட்ட போது யாரிடமும் அனுமதி வாங்கத் தேவையில்லை எனக் கூறி எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனா்.
எனவே இவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் அவா் குறிப்பிட்டிருந்தாா். இதே போல, மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும் புகாா் செய்தாா். இதுகுறித்து கூடலூா் காவல் ஆய்வாளா் வனிதாமணி விசாரணை நடத்தி வருகிறாா்.
தொடர்புடையது

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: பள்ளி ஆசிரியருக்கு 20 ஆண்டுகள் சிறை
இளைஞருக்கு கொலை மிரட்டல்: ஒருவா் கைது

தலைமை ஆசிரியருக்கு கொலை மிரட்டல்: கவுன்சிலா் மீது வழக்குப் பதிவு

சவுக்குப் பயிா்கள் சேதம்: போலீஸாா் விசாரணை
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

