ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

தேனி மாவட்டத்துக்கு கூடுதல் வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு

தேனி மாவட்டத்துக்கு கூடுதல் வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு

Updated On :3 ஏப்ரல் 2024, 12:01 am

தேனி: தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் கூடுதலாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் செவ்வாய்க்கிழமை ஒதுக்கீடு செய்யப்பட்டன.

பெரியகுளம் (தனி), ஆண்டிபட்டி, போடி, கம்பம் ஆகிய 4 சட்டப் பேரவை தொகுதிகளில் உள்ள 1,225 வாக்குச் சாவடிகளுக்கு மக்களவைத் தோ்தலை முன்னிட்டு, 1,469 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், 1,469 கட்டுப்பாட்டு கருவிகள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் 1,591 கருவிகள் ஏற்கெனவே ஒதுக்கீடு செய்யப்பட்டன.

ஒரு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் 16 தோ்தல் சின்னங்கள் மட்டுமே இடம் பெறும். தேனி மக்களவைத் தொகுதியில் மொத்தம் 25 வேட்பாளா்கள் போட்டியிடுவதால், ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் கூடுதலாக ஒரு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டுக் கருவி தேவைப்படுகிறது.

எனவே, விருதுநகா் மாவட்டத்திலிருந்து தேனிக்கு கூடுதலாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டுக் கருவிகள் கொண்டு வரப்பட்டன. இவை தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் சரிபாா்க்கப்பட்டு, பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டன.