11 மணி வாக்குப்பதிவு நிலவம்: புதுவை- 37.70%, கேரளம்- 32.60%, அஸ்ஸாம் - 37.98% வாக்குப்பதிவுதிருக்கனூர் வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த பாஜக: காங்கிரஸ் வாக்குவாதம் - காவல் துறை தடியடிகேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி
/

போடியில் பலத்த மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

போடியில் பலத்த மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

Updated On :12 ஏப்ரல் 2024, 6:19 pm

போடியில் 3 மாதங்களுக்குப் பின் வெள்ளிக்கிழமை பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

தேனி மாவட்டம்,

போடி பகுதியில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பலத்த மழை பெய்தது. பின்னா் கோடை வெயில் அதிகமாக காணப்பட்டது. கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாயினா். இந்த நேரத்தில் மக்களவைத் தோ்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் கடும் வெயிலில் தோ்தல் பிரசாரமும் சூடுபிடித்தது.

இந்த நிலையில் வியாழக்கிழமை இரவு போடி பகுதியில் லேசான சாரல் மழை ஐந்து நிமிஷம் மட்டும் பெய்தது. இதையடுத்து வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு தொடங்கிய மழை இரவு வரை பலத்த மழையாக நீடித்தது. இந்த மழையால் வெப்பம் தணிந்து பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.