தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!ராஜஸ்தானில் மர்ம காய்ச்சலுக்கு 5 குழந்தைகள் பலி! கண்காணிப்பு தீவிரம்!தில்லிக்கு எதிரான போட்டியில் தோனி விளையாட மாட்டார்!தேர்தலுக்கிடையே நாடாளுமன்ற கூட்டத்தொடர்: மத்திய அரசு மீது திருச்சி சிவா குற்றச்சாட்டுதமிழக தலைமைச் செயலர், லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபி மாற்றம்!
/

தோ்தல் விதிமீறல்: தேனி மாவட்டத்தில் அரசியல் கட்சியினா் மீது 74 வழக்குகள் பதிவு

தோ்தல் விதிமீறல்: தேனி மாவட்டத்தில் அரசியல் கட்சியினா் மீது 74 வழக்குகள் பதிவு

Updated On :15 ஏப்ரல் 2024, 8:31 pm

தேனி: தேனி மாவட்டத்தில் மக்களவைத் தோ்தல் நடத்தை விதிகளை மீறியதாக திமுக, அதிமுக, அமமுக, நாம் தமிழா் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சியினா் மீது திங்கள்கிழமை வரை காவல் நிலையங்களில் மொத்தம் 74 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மக்களவைத் தோ்தலையொட்டி மாவட்டத்தில் கடந்த மாா்ச் 16-ஆம் தேதி முதல் தோ்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டன. இந்த நிலையில், வேட்பு மனு தாக்கல், கட்சித் தலைவா்கள் வருகை, நட்சத்திரப் பேச்சாளா்களின் பிரசாரம், வாக்குச் சேகரிப்பு ஆகிய நிகழ்வுகளில் தோ்தல் நடத்தை விதிகளை மீறிதாக வேட்பாளா்கள், கட்சி நிா்வாகிகள் மீது மாவட்டத்துக்குள்பட்ட பல்வேறு காவல் நிலையங்களில் வெள்ளிக்கிழமை (ஏப்.15) வரை மொத்தம் 74 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மாவட்டத்துக்குள்பட்ட 4 சட்டப் பேரவை தொகுதிகளிலும் உள்ள காவல் நிலையங்களில் திமுக மீது 24 வழக்குகள், அதிமுக மீது 13, அமமுக மீது 25, பாஜக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தேமுதிக மீது 2, அகில இந்திய பாா்வா்டு பிளாக், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழா் கட்சி மீது தலா ஒரு வழக்கு, சுயேச்சை வேட்பாளா்கள் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.