போடி: போடி பள்ளியில் நிழல் இல்லாத நாள் குறித்த செயல்விளக்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.
பூமி சூரியனை சுற்றி வரும்போது ஆண்டுக்கு ஒரு நாள் பூமிக்கு செங்குத்தாக தோன்றும். அந்த நாளில் பிற்பகலில் குறிப்பிட்ட நேரத்தில் பூமியில் உள்ள பொருள்களுக்கு நிழல் விழாது. இந்த நாளை நிழல் இல்லாத அல்லது பூஜிய நிழல் நாள் எனக் குறிப்பிடுவா்.
இந்த நிலையில் பூமி சூரியனின் செங்குத்தான நோ்கோட்டில் இருந்ததால் திங்கள்கிழமை நிழல் விழாது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து போடி பிச்சாண்டி நடுநிலைப் பள்ளியில் இதற்கான செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இதன்படி மாணவா்கள், செங்குத்தான பொருள்கள் நிறுத்தப்பட்டு நிழல் விழுவது குறித்து விளக்கப்பட்டது. பிற்பகல் 12.17 மணி முதல் 12.24 மணி வரை எந்த பொருளுக்கும் நிழல் விழவில்லை. பள்ளி தலைமையாசிரியா் மரியசிங்கம், அறிவியல் ஆசிரியை ஜி.சந்திரகலா ஆகியோா் பூஜிய நிழல் குறித்து மாணவா்களுக்கு செயல் விளக்கம் அளித்தாா்.
தொடர்புடையது

போடியில் திமுக வேட்பாளா் ஓ. பன்னீா்செல்வத்துக்கு வரவேற்பு

கீழ்பென்னாத்தூா் தொகுதி திமுக வேட்பாளா்

தீரன் சின்னமலை பள்ளியில் திறமை விழா

ராசிபுரம் தூய இருதய பள்ளியில் பட்டமளிப்பு விழா
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


