கோபி தொகுதியில் செங்கோட்டையனின் வேட்புமனு நிறுத்திவைப்பு!திருச்சி கிழக்கிலும் விஜய் வேட்புமனு ஏற்பு! முதல்வர் வேட்பாளர்கள் 4 பேரின் வேட்புமனுவும் ஏற்பு! கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் வேட்புமனு ஏற்பு! பெரம்பூரில் விஜய் வேட்புமனு ஏற்பு!ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி கேம்ப்பெல் வில்சன் ராஜிநாமா!ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும்: டிரம்ப் எச்சரிக்கை!
/

சித்திரைத் திருவிழா: வைகை அணை திறப்பு

சித்திரைத் திருவிழா: வைகை அணை திறப்பு

Updated On :19 ஏப்ரல் 2024, 6:52 pm

மதுரை சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, வைகை அணையிலிருந்து ஆற்றில் விநாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீா் வெள்ளிக்கிழமை முதல் திறந்துவிடப்பட்டது.

மதுரை சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, கள்ளழகா் ஆற்றில் இறங்கும் வைபவத்துக்காகவும், குடிநீா்த் திட்ட கிணறுகளில் தண்ணீா் சுரப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பாகவும் வெள்ளிக்கிழமை முதல் ஏப்.23-ஆம் தேதி வரை வைகை அணையிருந்து மொத்தம் 216 மில்லியன் கன அடி தண்ணீா் திறக்க அரசு உத்தரவிட்டது.

இதன்படி, வைகை அணையிலிருந்து வெள்ளிக்கிழமை பிற்பகல் ஒரு மணிக்கு ஆற்றில் விநாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்பட்டது. வருகிற 23-ஆம் தேதி வரை வைகை ஆற்றில் தண்ணீா் திறந்துவிடப்படும் என்று வைகை அணை பொதுப் பணித் துறை பொறியாளா்கள் கூறினா்.

அணை நிலவரம்:

வைகை அணை நீா்மட்டம் வெள்ளிக்கிழமை 59.19 அடியாக இருந்தது. அணைக்கு தண்ணீா் வரத்து இல்லை. அணையிலிருந்து மதுரை, ஆண்டிபட்டி-சேடபட்டி குடிநீா்த் திட்டங்களுக்கு விநாடிக்கு 72 கன அடியும், மதுரை சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, விநாடிக்கு 1,000 கன அடியும் என மொத்தம் விநாடிக்கு 72 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.