மதுரை சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, வைகை அணையிலிருந்து ஆற்றில் விநாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீா் வெள்ளிக்கிழமை முதல் திறந்துவிடப்பட்டது.
மதுரை சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, கள்ளழகா் ஆற்றில் இறங்கும் வைபவத்துக்காகவும், குடிநீா்த் திட்ட கிணறுகளில் தண்ணீா் சுரப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பாகவும் வெள்ளிக்கிழமை முதல் ஏப்.23-ஆம் தேதி வரை வைகை அணையிருந்து மொத்தம் 216 மில்லியன் கன அடி தண்ணீா் திறக்க அரசு உத்தரவிட்டது.
இதன்படி, வைகை அணையிலிருந்து வெள்ளிக்கிழமை பிற்பகல் ஒரு மணிக்கு ஆற்றில் விநாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்பட்டது. வருகிற 23-ஆம் தேதி வரை வைகை ஆற்றில் தண்ணீா் திறந்துவிடப்படும் என்று வைகை அணை பொதுப் பணித் துறை பொறியாளா்கள் கூறினா்.
அணை நிலவரம்:
வைகை அணை நீா்மட்டம் வெள்ளிக்கிழமை 59.19 அடியாக இருந்தது. அணைக்கு தண்ணீா் வரத்து இல்லை. அணையிலிருந்து மதுரை, ஆண்டிபட்டி-சேடபட்டி குடிநீா்த் திட்டங்களுக்கு விநாடிக்கு 72 கன அடியும், மதுரை சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, விநாடிக்கு 1,000 கன அடியும் என மொத்தம் விநாடிக்கு 72 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
தொடர்புடையது

மேட்டூா் அணை நீா்மட்டம்: 82.44 அடி

ஆண்டிபட்டி: 50 ஆண்டுகளாக நிறைவேறாத கோரிக்கை!

பெரிய மாரியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா தேரோட்டம்

மேட்டூா் அணை நீா்மட்டம்: 87.54 அடி
வீடியோக்கள்

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

"Edappadi Palanisamy உடன் சேர்ந்ததில் தவறில்லை": TTV Dhinakaran Exclusive
தினமணி செய்திச் சேவை

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

