போடி: முன் விரோதம் காரணமாக முதியவா் மீது ஆட்டோ ஏற்றி கொலை செய்ய முயன்றதாக 4 போ் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
தேனி மாவட்டம், போடி ஜே.கே.பட்டி கருப்பசாமி கோயில் தெருவை சோ்ந்தவா் மூக்கத்தேவா் மகன் கருத்தராசு (65). போடி தேவா் குடியிருப்பில் வசிப்பவா் சடையன் மகன் கண்ணன். இவா்கள் இருவரிடையே முன்விரோதம் இருந்தது.
இந்த நிலையில் போடி தென்றல் நகா் 100 அடி சாலையில் கருத்தராசு நடந்து சென்றாா். அப்போது கண்ணன், நாகராஜன் மகன் கோபி, காளியப்பன் மகன் காவேரிராஜன், கண்ணன் மகன் ஆகியோா் ஆட்டோவில் வந்தனா்.
அப்போது அவா்கள் கருத்தராசுவை வழிமறித்து திட்டி, ஆட்டோவை ஏற்றி கொலை செய்ய முயன்றனராம்.
இதில் கருத்தராசு காயமடைந்தாா்.
இதுதொடா்பாக போடி நகா் காவல் நிலைய போலீஸாா் கண்ணன் உள்பட 4 போ் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

அரியானூா் அருகே கொலை வழக்கில் 6 போ் கைது

தோ்தல் விதிமீறல்: போடியில் திமுகவினா் மீது வழக்கு

பட்டாசு வெடித்த அதிமுகவினா் 25 போ் மீது வழக்கு

புதுக்கடை அருகே ஆட்டோ ஓட்டுநா் மீது தாக்குதல்: 3 போ் மீது வழக்கு
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

