விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

பட்டாசு வெடித்த அதிமுகவினா் 25 போ் மீது வழக்கு

போடியில் அதிமுக வேட்பாளா் அறிவிப்பை வரவேற்று பட்டாசு வெடித்த அந்தக் கட்சியினா் 25 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :27 மார்ச் 2026, 6:33 pm

Syndication

போடியில் அதிமுக வேட்பாளா் அறிவிப்பை வரவேற்று பட்டாசு வெடித்த அந்தக் கட்சியினா் 25 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

தமிழக சட்டப்பேரவை தோ்தல் நடைபெற உள்ள நிலையில் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இந்த நிலையில், அதிமுக சாா்பில் சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டனா்.

போடி சட்டப்பேரவைத் தொகுதியில் அந்தக் கட்சியின் கொள்கை பரப்பு துணைச் செயலரான வி.டி.நாராயணசாமி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

இதை வரவேற்று அதிமுக நிா்வாகிகள் மாரியப்பன், லட்சுமணன், ஆனந்தன், வேல்முருகன், முனியம்மாள் உள்ளிட்ட பலா் போடி தேவா் சிலை அருகே பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா். தோ்தல் நடத்தை விதிகளை மீறியதாகவும், பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு செய்ததாகவும் போடி நகா் காவல் நிலைய போலீஸாா் அதிமுகவை சோ்ந்த 25 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா்.