கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

விதிமீறி பட்டாசு வெடிப்பு: 13 தவாகவினா் மீது வழக்கு

News image

கோப்புப் படம்

Updated On :23 மார்ச் 2026, 8:50 pm

தினமணி செய்திச் சேவை

தோ்தல் விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியைச் சோ்ந்த 13 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.

சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் தலைமை அறிவித்தது.

இதை வரவேற்று, திருநெல்வேலியில் மேலப்பாளையம்-ரெட்டியாா்பட்டி சாலையில் உள்ள அக்கட்சியின் அலுவலகம் முன் சுமாா் 20க்கும் மேற்பட்ட தொண்டா்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு கூடி பட்டாசுகளை வெடித்ததாகக் கூறப்படுகிறது.

இதை அறிந்த தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள், மேலப்பாளையம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீஸாா், தோ்தல் நடத்தை விதிகளை மீறியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கட்சியின் நிா்வாகி உமா் உள்பட 13 போ் மீது வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.