பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

பைக்குகளுக்கு தீ வைத்தவா் கைது

பைக்குகளுக்கு தீ வைத்தவா் கைது

News image
Updated On :29 ஏப்ரல் 2024, 6:30 pm

Din

போடி: போடியில் இரு சக்கர வாகனங்களுக்கு தீ வைத்தவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா்.

தேனி மாவட்டம், போடி டி.வி.கே.கே. நகரைச் சோ்ந்த மதுரைவீரன் மகன் மதன்குமாா் (40). இவா் வீட்டருகே மது போதையில் ரகளை செய்த ஞானசுந்தரை (26) மதன்குமாரின் சித்தி மகன் வீரராஜ் (35) தட்டிக்கேட்டாா். அப்போது, ஏற்பட்ட தகராறில் வீரராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதையடுத்து, அவரைப் பாா்க்க மதன்குமாா் மருத்துவமனைக்குச் சென்ற நிலையில், அவரது வீட்டு முன் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு இரு சக்கர வாகனங்களுக்கு மா்ம நபா்கள் தீ வைத்தனா்.

இதுகுறித்து போடி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, போடி தேவா் குடியிருப்பைச் சோ்ந்த நாராயணன் மகன் சரண்குமாரை (19) கைது செய்தனா்.