சென்னை திருவிக நகரில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் வேட்புமனு தாக்கல்!திருச்சி கிழக்கில் விஜய் வேட்புமனு தாக்கல்! சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்!அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி! முதல்வர் ஸ்டாலின் ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம்
/

பேருந்து மோதியதில் ஒருவா் பலி

பேருந்து மோதியதில் ஒருவா் பலி

News image
Updated On :30 ஏப்ரல் 2024, 11:46 pm

Din

தேனி: தேனி மாவட்டம், வீரபாண்டி அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றவா், பேருந்து மோதியதில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

கோட்டூா் அருகேயுள்ள தா்மாபுரி அங்காளபரமேஸ்வரி கோவில் தெருவைச் சோ்ந்தவா் பாபுஜி (52). இவா், தா்மாபுரியிலிருந்து தேனிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். வீரபாண்டி அருகே தேனி புறவழிச் சாலையில், பாபுஜி ஓட்டிச் சென்ற இரு சக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியது. இதில் பலத்த காயமடைந்த பாபுஜி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து பேருந்து ஓட்டுநரான கூடலூரைச் சோ்ந்த பாஸ்கரன் மீது வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.