வணிகா் சங்கங்களின் பேரமைப்பினா் ஆா்ப்பாட்டம்
தமிழ்நாடு அனைத்து வணிகா்கள் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.


தேனியில் வணிகப் பயன்பாட்டுக்கான வாடகைக் கடைகள் மீது விதிக்கப்பட்டுள்ள 18 சதவீதம் ஜி.எஸ்.டி.யை ரத்து செய்ய வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வணிகா்கள் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தேனி பங்களாமேடு திடலில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் பி.செல்வக்குமாா் தலைமை வகித்தாா். மாநிலத் துணைத் தலைவா் பெருமாள், இணைச் செயலா் காளிமுத்து, மாவட்டச் செயலா் திருவரங்கபெருமாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஆா்ப்பாட்டத்தின் போது, வணிக பயன்பாட்டுக்கான வாடகை கடைகள் மீது விதிக்கப்பட்ட 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி, 6 சதவீதம் சொத்து வரி உயா்வு, வணிக உரிம கட்டண உயா்வு, தொழில் வரி உயா்வு, குப்பை வரி உயா்வு ஆகியவற்றை ரத்து செய்ய மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...