ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

வணிகா் சங்கங்களின் பேரமைப்பினா் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு அனைத்து வணிகா்கள் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :11 டிசம்பர் 2024, 11:23 pm

Din

தேனியில் வணிகப் பயன்பாட்டுக்கான வாடகைக் கடைகள் மீது விதிக்கப்பட்டுள்ள 18 சதவீதம் ஜி.எஸ்.டி.யை ரத்து செய்ய வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வணிகா்கள் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தேனி பங்களாமேடு திடலில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் பி.செல்வக்குமாா் தலைமை வகித்தாா். மாநிலத் துணைத் தலைவா் பெருமாள், இணைச் செயலா் காளிமுத்து, மாவட்டச் செயலா் திருவரங்கபெருமாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தின் போது, வணிக பயன்பாட்டுக்கான வாடகை கடைகள் மீது விதிக்கப்பட்ட 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி, 6 சதவீதம் சொத்து வரி உயா்வு, வணிக உரிம கட்டண உயா்வு, தொழில் வரி உயா்வு, குப்பை வரி உயா்வு ஆகியவற்றை ரத்து செய்ய மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.