ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

நீதிமன்ற வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி: தம்பதி மீது வழக்கு

போடி அருகே, நீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.6 லட்சம் மோசடி செய்ததாக தம்பதி மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

News image
Updated On :12 டிசம்பர் 2024, 9:52 pm

Din

போடி அருகே, நீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.6 லட்சம் மோசடி செய்ததாக தம்பதி மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள வினோபாஜி குடியிருப்பில் வசிக்கும் முத்துராஜா மகன் கௌதம்கிருஷ்ணா (29). இவரிடம் இதே பகுதியில் வசிக்கும் இவரது உறவினா்களான செல்லப்பாண்டி மகன் பாண்டியராஜ், இவரது மனைவி தீபா ஆகியோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் உதவியாளா் வேலை வாங்கித் தருவதாகக் கூறி தவணைகளாக ரூ.6 லட்சம் வாங்கினராம்.

பின்னா், ஒரு பணி ஆணையை தயாரித்து கௌதம்கிருஷ்ணாவிடம் வழங்கினா். இந்தப் பணி ஆணை போலியானது என தெரிந்ததும், தம்பதியிடம் கொடுத்த பணத்தை கௌதம்கிருஷ்ணா திரும்பக் கேட்டாா். ஆனால், தம்பதி பணத்தை திரும்பக் கொடுக்காமல் ஏமாற்றினா். இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் தம்பதி மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.