நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வீடுபுகுந்து நகை திருட்டு

தேனி மாவட்டம், கம்பத்தில் பூட்டிய வீட்டில் பிரோவை உடைத்து தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

News image
Updated On :26 டிசம்பர் 2024, 12:14 am

Din

தேனி மாவட்டம், கம்பத்தில் பூட்டிய வீட்டில் பிரோவை உடைத்து தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

கம்பம் கெஞ்சையம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி மகன் ஈஸ்வரன் (50), தேநீா் கடை நடத்தி வருகிறாா். இவா் மனைவியுடன் கடந்த 15 -ஆம் தேதி வெளியூருக்குச் சென்றாா். மீண்டும் இருவரும் கடந்த திங்கள்கிழமை வீடு திரும்பினா்.

அப்போது, மா்ம நபா்கள் வீட்டின் பூட்டை உடைத்துப் புகுந்து, பீரோவிலிருந்த 3.5 பவுன் தங்கச் சங்கிலியை திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து கம்பம் தெற்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.