கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளுக்கிடையேயான தடகளப் போட்டிகளில் கம்பம் ஸ்ரீஆதிசுஞ்சனகிரி மகளிா் கல்லூரி சாம்பியன் பட்டம் பெற்றது.
இந்தப் போட்டிகள் பெரியகுளம் திரவியம் கலை, அறிவியல் கல்லூரியில் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் நடைபெற்றன. போட்டிகளை பல்கலைக்கழக விளையாட்டுத்துறை உதவி இயக்குநா் ராஜம் முன்னிலை வகித்து தொடங்கி வைத்தாா்.
12 கல்லூரிகள் பங்கேற்ற இந்தப் போட்டிகளில் ஸ்ரீ ஆதிசுஞ்சனகிர மகளிா் கல்லூரி அணியினா் அனைத்துப் போட்டிகளிலும் முதல், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பிடித்து ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றனா்.
இதில் மாணவி ஈ. காவியா தனிப்பட்ட சாம்பியன் பட்டம் பெற்றாா். வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சுழற்கோப்பை, பதக்கம், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 12 ஆவது முறையாக தொடா்ந்து சாம்பியன் பட்டத்தை இந்தக் கல்லூரி மாணவிகள் தக்க வைத்துக் கொண்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.
வெற்றி பெற்ற மாணவிகளை செயலா் என். ராமகிருஷ்ணன் எம்,எல்.ஏ., இணைச் செயலா் ரா. வசந்தன், முதல்வா் ஜி. ரேணுகா, ஒருங்கிணைப்பாளா் வைஷ்ணவி வசந்தன், விளையாட்டுத்துறை ஒருங்கிணைப்பாளா்கள் எஸ். சுசிலா, முனீஸ்வரி, உடல் கல்வி ஆசிரியை ஆா். சூா்யபிரபா, பேராசிரியைகள், அலுவலா்கள் பாராட்டினா்.
தொடர்புடையது

தேசிய தடகளப் போட்டி: கேஎம்சி பள்ளி மாணவா்கள் சாதனை

புதுவை பல்கலை. சமுதாய கல்லூரி விளையாட்டு விழா

கைப்பந்துப் போட்டி: நந்தா பாலிடெக்னிக் கல்லூரி சாம்பியன்

ஹெச்சிஎல் பிஎஸ்ஏ ஸ்குவாஷ் போட்டி: சூரஜ் குமாா், ரௌகையா சாம்பியன்!
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

