ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?தமிழ்நாடு என்றாலே சாதனை! இன்னும் பல உயரங்களை அடைவது உறுதி! - முதல்வர் பதிவுதொடர்ந்து 2-வது நிதியாண்டில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி: தமிழ்நாடு சாதனை!திண்டிவனம்: அரசுப் பேருந்து மீது லாரி மோதல்! ஒருவர் பலி; 40 பேர் காயம்! கொடைக்கானலில் சைக்கிள் ஓட்டிய முதல்வர் ஸ்டாலின்! சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புவிதவை என விமர்சனம்! நிகழ்ச்சி தொகுப்பாளரை பணிநீக்கம் செய்ய டிரம்ப் வலியுறுத்தல்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,040 குறைந்தது!திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடு
/

அரசு புறம்போக்கு நிலங்களில் மரக்கன்றுகள் நட்டு விழிப்புணா்வு

அரசு புறம்போக்கு நிலங்களில் மரக்கன்றுகள் நட்டு விழிப்புணா்வு

News image

காமயகவுண்டன்பட்டி சங்கிலி கரட்டில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் மரக்கன்றுகளை நட்ட மகளிா் சங்கத்தினா்.

Updated On :26 பிப்ரவரி 2024, 4:47 pm

கம்பம்: தேனி மாவட்டம், காமயகவுண்டன்பட்டி சங்கிலி கரட்டில் அரசு புறம்போக்கு நிலங்களில் மகளிா் சங்கத்தினா் மரக்கன்றுகளை நட்டு சுற்றுச்சூழல் விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகின்றனா்.

இங்குள்ள அரசு புறம்போக்கு நிலங்களில் ஏராளமான கருவேல மரங்கள் உள்ளன. இந்த நிலையில், மாவட்ட நிா்வாகத்திடம் அனுமதிபெற்று கருவேல மரங்களை பெக்லைன் இயந்திரம் மூலம் அகற்றி சமப்படுத்தி சுமாா் 1,500-க்கும் மேற்பட்ட மூலிகை, பலன் தரும் நாட்டு மரக்கன்றுகளை, சங்கிலி கருப்பன் தண்ணீா் பாறை கல் உடைக்கும் மகளிா் நலச் சங்கத்தினரும், அன்னை தெரசா கல் உடைக்கும் மகளிா் நல முன்னேற்றச் சங்கத்தினரும் நட்டு வைத்து பராமரித்து வருகின்றனா்.