தேனி: பெரியகுளம் அருகே சொக்கனலை- கன்னக்கரை மலை கிராமங்களுக்கு இடையே சாலை அமைத்துத் தரக் கோரி தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் சொக்கனலை கிராமத் தலைவா் செல்வம், வனக் குழு தலைவா் கண்ணன் மற்றும் பொதுமக்கள், மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு விவரம்:
சொக்கனலை மலைக் கிராமத்தில் 50 குடும்பத்தினா் வசித்து வருகிறோம். இங்கிருந்து பள்ளி, மருத்துவமனைக்கும், பொருள்கள் வாங்கவும் மலைப் பாதையில் 2 கி.மீ. தொலைவுக்கு கண்ணக்கரை வரை நடந்து சென்று, அங்கிருந்து சோத்துப்பாறை சாலை வழியாக பெரியகுளத்துக்குச் சென்று வருகிறோம்.
மலைக் கிராம மக்களின் நலன் கருதி சொக்கனலையிலிருந்து கண்ணக்கரை வரை தடுப்புச் சுவருடன் கூடிய சாலை வசதி செய்து தர வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தனா்.
தொடர்புடையது

போதமலை கிராமத்துக்கு முதன் முறையாக சாலை வழியாக கொண்டுசெல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்

மலைக் கிராமத்துக்கு குதிரைகளில் வாக்குப் பதிவு இயந்திரங்கள்

வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்கள் பெயா், சின்னம் பொருத்தும் பணி: ஆட்சியா் ஆய்வு

போடிநாயக்கனூர்! புறக்கணிப்புக்கு ஆயத்தமாகும் மலைக்கிராமங்கள்!!
வீடியோக்கள்

மனைவியை விதவை என விமர்சித்த தொகுப்பாளர்! கோவத்தில் Trump | Jimmy Kimmel
இணையதளச் செய்திப் பிரிவு

திருச்செந்தூரில் விஜய் சாமி தரிசன ரகசியம் ! | TVK Vijay | Tiruchendur Murugan Temple | TN Election 2026
தினமணி செய்திச் சேவை

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

