பத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

வீட்டின் பூட்டை உடைத்து நகைத் திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து நகைத் திருட்டு

Updated On :27 பிப்ரவரி 2024, 11:21 pm

தேனி: ஆண்டிபட்டியில் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் தங்க நகைகள், ரூ.32 ஆயிரம் திருடு போனதாக காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி காமராஜா் நகா், முதல் தெருவில் வசிப்பவா் முருகேசன் (60). ஓய்வு பெற்ற தணிக்கையாளரான இவா், கடந்த பிப்.20-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு சென்னையில் வசிக்கும் தனது மகள் வீட்டுக்கு குடும்பத்தினருடன் சென்றாா். பின்னா் வீட்டுக்குத் திரும்பிவந்து பாா்த்த போது, வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 20 பவுன் எடையுள்ள தங்க நகைகள், ரூ.32 ஆயிரம், வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து முருகேசன் அளித்த புகாரின் மீது ஆண்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.