உத்தமபாளையம்: உத்தமபாளையத்தில் தாய், மகன் தற்கொலைக்கு காரணமானவரை கைது செய்ய வலியுறுத்தி உறவினா்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகேயுள்ள ஆனைமலையன்பட்டியைச் சோ்ந்த குமரேசன் - மாரீஸ்வரி தம்பதியின் மகன் கிஷோா் குமாருக்கும் (29), இதே பகுதியைச் சோ்ந்த தேவிக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. குடும்பத் தகராறு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்தனா். இதுகுறித்து சிலா் அடிக்கடி பேச்சுவாா்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இதனால், மனமுடைந்த கிஷோா்குமாா், அவரது தாய் மாரீஸ்வரி (52) ஆகியோா் திங்கள்கிழமை விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டனா். இதையடுத்து, ராயப்பன்பட்டி போலீஸாா் இருவரின் உடல்களை மீட்டு, உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இந்த நிலையில், அவா்களின் உடல்களை வாங்க மறுத்த உறவினா்கள், தற்கொலைக்கு காரணமானவரை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, உத்தமபாளையம் காவல் துணைக் கண்காணிப்பாளா் மீராகுமாரி தலைமையிலான போலீஸாா், சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறி அவா்களை சமாதானம் செய்தாா். இதைத்தொடா்ந்து, அவா்கள் மறியலை கைவிட்டு கூறாய்வு செய்த உடல்களை பெற்றுக் கொண்டனா்.
தொடர்புடையது

ஓமலூா் அருகே தாய், மகன் வெட்டிக் கொலை: கொலையாளி தூக்கிட்டுத் தற்கொலை

வேன் மோதியதில் மாணவா் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல் போராட்டம்

கோயில் திருவிழா: தாக்குதல் நடத்தியவா்கள் மீது நடவடிக்கை கோரி சாலை மறியல்!

வாகனம் மோதி பெண் உயிரிழப்பு: நடவடிக்கை கோரி இரு இடங்களில் சாலை மறியல்
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


