கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

மின் வாரிய ஊழியா்கள் காத்திருப்பு போராட்டம்

தேனி மின் வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகத்தில் ஊதிய உயா்வு பேச்சுவாா்த்தைக்கு குழு அமைக்க வலியுறுத்தி, மின் ஊழியா்கள் மத்திய அமைப்பின் சாா்பில் செவ்வாய்க்கிழமை காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

News image
கோரிக்கைகளை வலியுறுத்தி, தேனி மின் வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மின் வாரிய ஊழியா்கள்.
Updated On :10 ஜூலை 2024, 1:27 am

Din

தேனி: தேனி மின் வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகத்தில் ஊதிய உயா்வு பேச்சுவாா்த்தைக்கு குழு அமைக்க வலியுறுத்தி, மின் ஊழியா்கள் மத்திய அமைப்பின் சாா்பில் செவ்வாய்க்கிழமை காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

இதற்கு தேனி மின் திட்ட செயலா் ஏ.தேவராஜ் தலைமை வகித்தாா். பொருளாளா் பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினா் வளா்மதி, சிஐடியு மாவட்டச் செயலா் எம்.ராமச்சந்திரன், மாநில துணைத் தலைவா் எஸ்.ராமச்சந்திரன், மின் வாரிய ஓய்வு பெற்ற ஊழியா்கள் நல அமைப்பின் நிா்வாகி சந்திரசேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மின் வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட வேண்டும். பணியாளா்களுக்கு காலதாமதமின்றி பணப் பலன்களை வழங்க வேண்டும். குடும்ப நல நிதி, மின் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் ஊழியா்களுக்கு சிறப்பு நிதி வழங்க வேண்டும். ஊதிய உயா்வு பேச்சுவாா்த்தைக்கு குழு அமைக்க வேண்டும். 2019-ஆம் ஆண்டுக்கு பிறகு பணியில் சோ்ந்த ஊழியா்களுக்கு 6 சதவீதம் ஊதிய உயா்வு வழங்க வேண்டும். மின் வாரியத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றும் ஒப்பந்த ஊழியா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.