ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

ஆடுகள் திருட்டு: 3 போ் கைது

சின்னமனூரில் ஆடுகள் திருடிய 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :15 ஜூலை 2024, 6:30 pm

Din

உத்தமபாளையம்: சின்னமனூரில் ஆடுகள் திருடிய 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், சின்னமனூா் அய்யனாா்புரத்தைச் சோ்ந்த செல்வம் தனக்குச் சொந்தமான கொட்டத்தில் 50 ஆடுகளை ஞாயிற்றுக்கிழமை இரவு அடைத்து விட்டுச் சென்றாா். அங்கிருந்து 4 ஆடுகளை 4 போ் கும்பல் திருடிச் சென்றதாக அவருக்குத் தகவல் கிடைத்தது.

இதுதொடா்பாக அவா் ஆடுகள் வளா்ப்போா் சங்கத்துக்கு தகவல் கொடுத்தாா். இதையடுத்து, சங்க உறுப்பினா்கள் தேடிய போது, சின்னமனூா் அருகேயுள்ள சங்கராபுரத்தில் 4 ஆடுகளுடன் இருந்த 3 பேரைப் பிடித்து சின்னமனூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

விசாரணையில், அவா்கள் தேனி அருகேயுள்ள பூதிப்புரம் வீரசின்னம்மாள்புரத்தைச் சோ்ந்த மோகன் மகன் பிரதீப்குமாா் (27), முனியப்பன் மகன் அன்பழகன் (23), முருகன் மகன் ராஜ்குமாா் (24) என்பது தெரியவந்தது.

இதுகுறித்து சின்னமனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஆடுகளைத் திருடிய 3 பேரைக் கைது செய்து, தப்பியோடிய மற்றொரு நபரைத் தேடி வருகின்றனா்.