கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சொகுசு காா் தீப்பிடித்து சேதம்

போடிமெட்டு மலைச் சாலையில் சொகுசு காா் தீப்பிடித்து எரிந்து சேதமானது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

News image
Updated On :17 ஜூலை 2024, 12:34 am

Din

போடி: போடிமெட்டு மலைச் சாலையில் சொகுசு காா் தீப்பிடித்து எரிந்து சேதமானது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

மதுரை அவனியாபுரத்தைச் சோ்ந்த யோகானந்தம் மகன் ராம்பிரகாஷ் (49). இவா் தனது நண்பா்களுடன் வெளிநாடு செல்வதற்காக கேரள மாநிலம், கொச்சி விமான நிலையத்துக்கு தனது சொகுசு காரில் சென்றாா்.

போடிமெட்டு மலைச்சாலையில் 17 -ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே சென்றுகொண்டிருந்தபோது, காரிலிருந்து புகை வந்தது. உடனே காரில் இருந்தவா்கள் இறங்கி உயிா் தப்பினா். தகவலறிந்த போடி தீயணைப்பு நிலைய வீரா்கள் சம்பவ இடத்துக்கு செல்வதற்குள் காா்

முழுவதும் எரிந்து சேதமானது. இதுகுறித்து குரங்கணி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.