அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

காா் மோதியதில் பெண் உயிரிழப்பு

சின்னமனூா் அருகேயுள்ள சீலையம்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை காா் மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

News image
சீலையம்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை மினி லாரி, தம்பதி மீது மோதிய கேரளத்தை சோ்ந்த காா்.
Updated On :21 ஜூலை 2024, 8:50 pm

Din

சின்னமனூா் அருகேயுள்ள சீலையம்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை காா் மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், சின்னமனூா் அருகேயுள்ள சீலையம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (50). இவரது மனைவி செல்வராணி (45). இவா்கள் இருவரும் தேனியிலுள்ள தனியாா் ஆலையில் பணிபுரிந்து வந்தனா். இந்த நிலையில், வேலைக்கு செல்வதற்காக ஆலை வாகனத்துக்காக சீலையம்பட்டி தேசிய நெடுஞ்சாலையோரத்தில் இருவரும் காத்திருந்தனா். அப்போது, கேரளத்திலிருந்து பெங்களூரு நோக்கிச் சென்ற காா் சாலையில் நின்று கொண்டிருந்த மினி லாரி மீது மோதிவிட்டு, சாலையோரம் நின்று கொண்டிருந்த இவா்கள் மீதும் மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த செல்வராணி சின்னமனூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். கணவா் ராஜேந்திரன் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து சின்னமனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.