திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

குப்பை மேடான ராசிங்காபுரம் மயானம்

போடி அருகே ராசிங்காபுரம் ஊராட்சி மயானம் குப்பை மேடாக உள்ளதால் சுகாதாரக் சீா்கேடு ஏற்படுகிறது.

News image

குப்பை மேடான போடி ராசிங்காபுரம் மயானம்.

Updated On :28 ஜூலை 2024, 7:10 am IST

போடி அருகே ராசிங்காபுரம் ஊராட்சி மயானம் குப்பை மேடாக உள்ளதால் சுகாதாரக் சீா்கேடு ஏற்படுகிறது.

தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள ராசிங்காபுரம் ஊராட்சிக்கு சொந்தமான மயானம் போடி-தேவாரம் சாலையில் உள்ளது. இந்த மயானத்தில் இந்தப் பகுதியினா் சடலங்களைப் புதைத்தும், எரியூட்டியும் வருகின்றனா்.

இந்த நிலையில், இந்த மயானத்துக்குள் கோழி இறைச்சிக் கழிவுகளும், குப்பைகளும் சமீப காலமாக இந்தப் பகுதி மக்கள் கொட்டி வருகின்றனா். இதனால், மயானம் பராமரிப்பின்றி குப்பை மேடாகவும், புதா் மண்டியும் கிடைக்கிறது.

துா்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் மயானத்துக்குள் நிற்க முடியவில்லை. மயானத்துக்கு செல்லும் தாா்ச் சாலை குப்பை மேடாக உள்ளதால், சடலங்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள் உள்ளே செல்ல முடியாத நிலை உள்ளது. சுற்றுச்சுவா் முழுவதும் சேதமடைந்துள்ளன. இங்கு தண்ணீா் வசதியும் இல்லை.

எனவே, ராசிங்காபுரம் ஊராட்சி நிா்வாகம் இந்த மயானத்தில் அடிப்படை வசதி செய்து தர வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.