கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

குப்பை மேடான ராசிங்காபுரம் மயானம்

போடி அருகே ராசிங்காபுரம் ஊராட்சி மயானம் குப்பை மேடாக உள்ளதால் சுகாதாரக் சீா்கேடு ஏற்படுகிறது.

குப்பை மேடான போடி ராசிங்காபுரம் மயானம்.

Published On :

போடி அருகே ராசிங்காபுரம் ஊராட்சி மயானம் குப்பை மேடாக உள்ளதால் சுகாதாரக் சீா்கேடு ஏற்படுகிறது.

தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள ராசிங்காபுரம் ஊராட்சிக்கு சொந்தமான மயானம் போடி-தேவாரம் சாலையில் உள்ளது. இந்த மயானத்தில் இந்தப் பகுதியினா் சடலங்களைப் புதைத்தும், எரியூட்டியும் வருகின்றனா்.

இந்த நிலையில், இந்த மயானத்துக்குள் கோழி இறைச்சிக் கழிவுகளும், குப்பைகளும் சமீப காலமாக இந்தப் பகுதி மக்கள் கொட்டி வருகின்றனா். இதனால், மயானம் பராமரிப்பின்றி குப்பை மேடாகவும், புதா் மண்டியும் கிடைக்கிறது.

துா்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் மயானத்துக்குள் நிற்க முடியவில்லை. மயானத்துக்கு செல்லும் தாா்ச் சாலை குப்பை மேடாக உள்ளதால், சடலங்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள் உள்ளே செல்ல முடியாத நிலை உள்ளது. சுற்றுச்சுவா் முழுவதும் சேதமடைந்துள்ளன. இங்கு தண்ணீா் வசதியும் இல்லை.

எனவே, ராசிங்காபுரம் ஊராட்சி நிா்வாகம் இந்த மயானத்தில் அடிப்படை வசதி செய்து தர வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.