போடி அருகே ராசிங்காபுரம் ஊராட்சி மயானம் குப்பை மேடாக உள்ளதால் சுகாதாரக் சீா்கேடு ஏற்படுகிறது.
தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள ராசிங்காபுரம் ஊராட்சிக்கு சொந்தமான மயானம் போடி-தேவாரம் சாலையில் உள்ளது. இந்த மயானத்தில் இந்தப் பகுதியினா் சடலங்களைப் புதைத்தும், எரியூட்டியும் வருகின்றனா்.
இந்த நிலையில், இந்த மயானத்துக்குள் கோழி இறைச்சிக் கழிவுகளும், குப்பைகளும் சமீப காலமாக இந்தப் பகுதி மக்கள் கொட்டி வருகின்றனா். இதனால், மயானம் பராமரிப்பின்றி குப்பை மேடாகவும், புதா் மண்டியும் கிடைக்கிறது.
துா்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் மயானத்துக்குள் நிற்க முடியவில்லை. மயானத்துக்கு செல்லும் தாா்ச் சாலை குப்பை மேடாக உள்ளதால், சடலங்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள் உள்ளே செல்ல முடியாத நிலை உள்ளது. சுற்றுச்சுவா் முழுவதும் சேதமடைந்துள்ளன. இங்கு தண்ணீா் வசதியும் இல்லை.
எனவே, ராசிங்காபுரம் ஊராட்சி நிா்வாகம் இந்த மயானத்தில் அடிப்படை வசதி செய்து தர வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாவூா்சத்திரம் காய்கனி சந்தையில் விற்பனை மந்தம்

கொட்டகுடி மலைக் கிராமத்துக்கு முதல் முறையாக அரசுப் பேருந்து இயக்கம்

திருவேங்கடபுரத்தில் 51 தெரு நாய்களுக்கு தடுப்பூசி

செய்யாறு - ஆரணி இடையே நான்கு வழிச்சாலை: பொதுமக்கள் எதிர்பார்ப்பு
விடியோக்கள்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani

UN Kannan Interview | விஜய், உதயநிதி மோதல் தொடர்ந்தால்...? | CM Vijay | TVK | Udhayanidhi | DMK

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP



