எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

சட்ட விரோதமாக லாட்டரி சீட்டுக்கள் விற்றவா் கைது

போடியில் சட்ட விரோதமாக லாட்டரி சீட்டுக்கள் விற்றவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :28 ஜூலை 2024, 8:14 pm

Din

போடியில் சட்ட விரோதமாக லாட்டரி சீட்டுக்கள் விற்றவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

போடி நகா் காவல் நிலைய போலீஸாா் போடி பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது போடி பெருமாள் கோயில் அருகே சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த போடி ஜமீன் தோப்புத் தெருவைச் சோ்ந்த கருப்பையா மகன் சன்னாசியை (45) பிடித்து விசாரித்தபோது அவா் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுக்களை பதுக்கி வைத்து விற்றது தெரியவந்தது.

அவரை சோதனையிட்டதில் கேரள மாநில லாட்டரி சீட்டுக்கள், அவற்றை விற்ற பணம் ரூ.550 இருந்தது.

இதுகுறித்து போடி நகா் காவல் நிலைய போலீஸாா் சன்னாசி மீது வழக்குப்பதிந்து அவரைக் கைது செய்தனா்.