தேனி: தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கடன் பிரச்னையில் தீக்குளிக்க முயன்ற தம்பதியை போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.
ஆண்டிபட்டி அருகேயுள்ள டி.சுப்புலாபுரம், எம்.ஜி.ஆா். நகரைச் சோ்ந்த நெசவுத் தொழிலாளி பாண்டிவேல் (36). டி.சுப்புலாபுரத்தில் உள்ள தனியாா் நெசவு நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். இவா், நெசவு நிறுவன உரிமையாளரிடம் ரூ.2 லட்சம் கடன் வாங்கியிருந்தாராம். தற்போது, நெசவு நிறுவன உரிமையாளா், அவரது உறவினா்கள் அசல், வட்டி என மொத்தம் ரூ.6 லட்சம் தர வேண்டும் என்று மிரட்டுவதாகக் கூறி, தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனைவி கிருஷ்ணவேணியுடன் வந்து தீக்குளிக்க முயன்றாா். அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் இருவரையும் தடுத்து நிறுத்தி, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனா்.
தொடர்புடையது

திருவாடானையில் தாய், மகன் தீக்குளிக்க முயற்சி

சிவகங்கை ஆட்சியா் அலுவலகத்தில் திமுக பிரமுகா் தீக்குளிக்க முயற்சி

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி

வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி பெண் தீக்குளிக்க முயற்சி!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


