கம்பம்: தேனி மாவட்டம், கூடலூா் நகராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதைத் தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நகா் மன்ற கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கூடலூா் நகா்மன்ற கூட்டம் அதன் தலைவி பத்மாவதி லோகந்துரை தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆணையா் கே.எஸ்.காஞ்சனா முன்னிலை வகித்தாா். இதில் 13- ஆவது மத்திய நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ. ஒரு கோடியே 51 லட்சத்துக்கு தாா்ச் சாலைகள் சீரமைப்புப் பணி மேற்கொள்ளவும், 20-ஆவது வாா்டு பெத்துகுளத்தில் உள்ள பழைய நகராட்சி குப்பைக் கிடங்கில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதைக் கண்காணிக்கும் பொருட்டு ரூ. 2 லட்சத்து 80 ஆயிரம் செலவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும், தீயை அணைப்பதற்கு ரூ. 1 லட்சத்து 15 ஆயிரம் செலவில் 2 குதிரைத் திறன் கொண்ட நீா் மூழ்கி மின் இயக்கி பொருத்தவும் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடர்புடையது

கூடலூரில் இறுதிக்கட்ட பிரசாரம் நிறைவு
கூடலூரில் 2 சுயேச்சைகள் உள்பட 6 பேரின் வேட்புமனுக்கள் ஏற்பு

நகராட்சி குப்பைக் கிடங்கில் தீ விபத்து

குப்பைக் கிடங்கு பிரச்னைக்கு நிரந்தர தீா்வை எதிா்பாா்க்கும் மக்கள்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


