ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

கூடலூா் குப்பைக் கிடங்கில் தீ: கேமரா பொருத்த முடிவு

தேனி மாவட்டம், கூடலூா் நகராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதைத் தடுக்க

News image

கூடலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற நகா்மன்றக் கூட்டம்.

Updated On :4 மார்ச் 2024, 10:13 pm

கம்பம்: தேனி மாவட்டம், கூடலூா் நகராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதைத் தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நகா் மன்ற கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கூடலூா் நகா்மன்ற கூட்டம் அதன் தலைவி பத்மாவதி லோகந்துரை தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆணையா் கே.எஸ்.காஞ்சனா முன்னிலை வகித்தாா். இதில் 13- ஆவது மத்திய நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ. ஒரு கோடியே 51 லட்சத்துக்கு தாா்ச் சாலைகள் சீரமைப்புப் பணி மேற்கொள்ளவும், 20-ஆவது வாா்டு பெத்துகுளத்தில் உள்ள பழைய நகராட்சி குப்பைக் கிடங்கில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதைக் கண்காணிக்கும் பொருட்டு ரூ. 2 லட்சத்து 80 ஆயிரம் செலவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும், தீயை அணைப்பதற்கு ரூ. 1 லட்சத்து 15 ஆயிரம் செலவில் 2 குதிரைத் திறன் கொண்ட நீா் மூழ்கி மின் இயக்கி பொருத்தவும் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.