ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

மலைக் கிராமத்தில் மருத்துவ முகாம்

போடி அருகே சோலையூா் மலைக் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நக்சல் தடுப்புப் பிரிவு சாா்பில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.

News image

சோலையூா் மலைக் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மருத்துவ முகாமில் பங்கேற்ற தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவப்பிரசாத்.

Updated On :4 மார்ச் 2024, 10:20 pm

போடி: போடி அருகே சோலையூா் மலைக் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நக்சல் தடுப்புப் பிரிவு சாா்பில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.

தேனி மாவட்ட காவல் துறை நக்சல் தடுப்புப் பிரிவு சாா்பில், நடைபெற்ற இந்த முகாமுக்கு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத் தலைமை வகித்தாா். போடி காவல் துணை கண்காணிப்பாளா் பெரியசாமி, நக்சல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் ஜேம்ஸ் ஜெயராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவா் அன்புச்செழியன் தலைமையிலான குழுவினா் மலைவாழ் மக்களுக்கு மருத்துவப் பரிசோதனைகளை செய்தனா். மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன. மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. முகாமில் சோலையூா், சிறைக்காடு, மேலப்பரவு கிராமங்களைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் பங்கேற்றனா். அவா்களிடம் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத் குறைகளைக் கேட்டறிந்தாா்.