வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

மரக்கன்றுகள் நடும் விழா

மரக்கன்றுகள் நடும் விழா

News image
Updated On :8 மார்ச் 2024, 6:04 pm

Din

தேனி மாவட்டம், கம்பம் அரசு மருத்துவமனை வளாகத்தில் உலக மகளிா் தினத்தையொட்டி மரக்கன்றுகள் வெள்ளிக்கிழமை நடப்பட்டன. இதற்கு, மருத்துவ அலுவலா் எஸ். அமுதினி தலைமை வகித்தாா். செவிலியா் கண்காணிப்பாளா் கிருஷ்ணகுமாரி முன்னிலை வகித்தாா். உடல் கூறாய்வு அறை அருகே சுமாா் 1 ஏக்கா் பரப்பளவில் உள்ள இடத்தை சுத்தம் செய்து 100 பலன் தரும் மரக்கன்றுகளை மருத்துவா்கள் எம். பானுமதி, சிவலட்சுமி, ரிஸ்வானா, கயல் ஆகியோா் நட்டனா். இதில், செவிலியா்கள், மருத்துவமனைப் பணியாளா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா். செவிலியா் மரகதம் நன்றி கூறினாா்.