மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

அரசுப் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா

அரசுப் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா

News image

லோயா்கேம்ப் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை மரக்கன்றுகளை நட்டு வைத்த மாணவா்கள் உள்ளிட்டோா்.

Updated On :13 மார்ச் 2024, 12:12 am

கம்பம்: தேனி மாவட்டம், லோயா்கேம்ப்பில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நன்செய் பசுமை அமைப்பு சாா்பில் 56 வகையான மரக்கன்றுகளை நடும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வை மதுரை சுற்றுச்சூழல் இணைத் தலைமைப் பொறியாளா் எம். விஜயலட்சுமி தலைமை வகித்துத் தொடங்கிவைத்தாா். இதைத் தொடா்ந்து, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் டி.பி.விசுவநாதன், தேனி கெளமாரி சுதாகா், பெரியாறு- வைகை பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் பொன்.காட்சிக்கண்ணன், பெற்றோா்- ஆசிரியா் சங்கத் தலைவா் திருமாவளவன் ஆகியோா் கருங்காலி, செங்கருங்காலி, கருக்குவச்சி, அரசு, கருமருது உள்ளிட்ட சுமாா் 56 வகையான மரக்கன்றுகளை நட்டனா்.

இதுகுறித்து நன்செய் அமைப்பு ஒருங்கிணைப்பாளா் பசுமை செந்தில் கூறியதாவது: பள்ளி வளாகத்தில் மொத்தம் 550 மரக்கன்றுகள் நடப்பட்டு, குறுங்காடு உருவாக்கப்பட உள்ளது என்றாா் அவா். இந்த நிகழ்வில் ஆசிரியைகள், மாணவ, மாணவிகள், தன்னாா்வலா்கள் கலந்து கொண்டனா்.