கேரளத்தில் பட்டாசு வெடித்து விபத்து: 12 பேர் பலி; 40 பேர் படுகாயம்மேற்கு வங்கத்தில் முதல் கட்ட தேர்தல் பிரசாரம் நிறைவுதமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

இணையவழி அவதூறு பிரசாரத்தை தடுக்கத் தனிப் பிரிவு

இணையவழி அவதூறு பிரசாரத்தை தடுக்கத் தனிப் பிரிவு

Updated On :19 மார்ச் 2024, 11:11 pm

தேனி: தேனி மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டதையடுத்து, தோ்தல் தொடா்பான இணையவழி அவதூறு பிரசாரங்களை தடுப்பதற்கு காவல் துறை சாா்பில் தனிப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத் கூறியது:

மக்களவைத் தோ்தலை முன்னிட்டு, உண்மைக்கு புறம்பான தகவல், செய்திகளை உள் நோக்கத்துடன் சமூக வலைதளம், குறுஞ்செய்தி மூலம் எழுத்து, காட்சி வழியில் வெளியிட்டு பிரசாரம் செய்வதைத் தடுக்கவும், அவதூறு பிரசாரம் செய்வோா் மீது நடவடிக்கை எடுக்கவும் காவல் துறை மாவட்ட இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு சாா்பில் தனிப் பிரிவு தொடங்கப்பட்டது.

இதுகுறித்த புகாா்களை பொதுமக்கள் காவல் கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண்: 04546-261730, கைப்பேசி எண்:93638 73078-இல் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றாா் அவா்.