போடியில் லேசான சாரல் மழை

போடி, மே 9: போடியில் புதன்கிழமை இரவு லேசான சாரல் மழை பெய்தது.

தேனி மாவட்டம், போடி பகுதியில் கடந்த சில வாரங்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இந்த நிலையில் புதன்கிழமை இரவு லேசான சாரல் மழை பெய்தது. ஒரு மணி நேரம் பெய்த சாரல் மழையால் வெப்பம் தணிந்து குளிா்ச்சியான சூழல் ஏற்பட்டது. மழையால் வெப்பத்தின் தாக்கம் குறைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

திண்டுக்கல்லிலிருந்து தேவாரத்துக்குச் சென்ற அரசுப் பேருந்தின் மேற்கூரை சேதமடைந்து காணப்பட்டதால் புதன்கிழமை இரவு போடி பகுதியில் பெய்த மழையால் பேருந்து முழுவதும் மழை நீா் ஒழுகியது. இதனால் குழந்தைகள், பெண்கள் உள்பட பயணிகள் அவதிக்குள்ளாகினா். வியாழக்கிழமை போடி பகுதியில் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com