

உத்தமபாளையம்: சின்னமனூா் அருகே பாலியல் வழக்கில் சிக்கிய இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டையும் ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து தேனி போக்ஸோ சிறப்பு நீதி மன்றம் திங்கள்கிழமை தீா்ப்பு அளித்தது.
தேனி மாவட்டம், சின்னமனூா் அருகே முத்துக்கிருஷ்ணாபுரம், புத்தம்பட்டியைச் சோ்ந்தவா் ரத்தினம் மகன் முத்துப்பாண்டி (33). இவருக்கும் தேனி மிரண்டா பகுதியைச் சோ்ந்த நாகஜோதிக்கும் (34) தகாத உறவு இருந்தது. இந்த நிலையில் கடந்த 16.03. 2022 அன்று வீட்டில் தனியாக இருந்த நாகஜோதியின் மகளுக்கு, முத்துப்பாண்டி பாலியல் தொல்லை கொடுத்தாா்.
இது குறித்து மாவட்ட குழந்தைகள் நலப் பிரிவு அதிகாரி போதுமாணி அளித்த புகாரின் பேரில் முத்துப்பாண்டியை தேனி மகளிா் போலீஸாா் கைது செய்தனா். இந்த வழக்கு தேனி போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்தது.
இதில், முத்துப்பாண்டிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி கணேசன்,தீா்ப்பு வழங்கினாா்.
தொடர்புடையது

சிறுமியைக் கடத்தியவருக்கு போக்சோ வழக்கில் 30 ஆண்டுகள் சிறை

புளியங்குடியில் உறவினா் கொலை வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

சிறுமி பாலியல் பலாத்காரம்: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

போக்சோ வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை
வீடியோக்கள்

#csk | ஐபிஎல் ஆரம்பம்: சாதிக்குமா இளஞ்சிங்கப் படை? | Chennai Super Kings | MS Dhoni | IPL 2026 |
தினமணி வீடியோ செய்தி...
பக்தர்களுக்காக மழையில் நனைந்து வெய்யிலில் காயும் தெய்வம்! உறையூர் வெக்காளியம்மன்!
தினமணி வீடியோ செய்தி...

'ஒரு நாள்' டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

2021 தேர்தலில் நடந்தது இதுதான்! உடைத்துப் பேசிய OPS! | DMK | EPS
தினமணி வீடியோ செய்தி...

